நீ என்பது எனக்கு
தனித்து கரையில் அமர்ந்திருக்கும்
பசித்த உயிரை
இரை காட்டி அழைக்கும் தெப்பம்
நானோ
நீ தரும் மாமிசம் உண்டு
உயிர்த்திருக்குமுன் வளர்ப்பு விலங்கு
- ஸ்ரீசங்கர்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Comments
Popular posts from this blog
-
பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்- மயிலன் ஜி சின்னப்பன் காரணம் தெரியாத மரணமொன்றின் பலியாய் மறைந்த ஆளின் கதையொன்று எங்கள் வீட்டிலும் இருக்கிறது. நேற்றைக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கழிந்த அவனின் மரணக்காரணம் இன்றைக்கு வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. வேலைக்குப் போன இடத்தில் மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டானென்ற முதல் தொலைபேசி எனக்குத்தான் வந்தது. உயர் சிகிச்சைக்கு வேண்டி (உயிர் இருக்கிறதா என்றறியாத மர்மங்களுடன்) தனியார் மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றும் செய்தி எனக்குத்தான் முதலில் சொல்லப்பட்டது. எத்தனையோ முயன்று பார்த்து விட்டோமென்றும் நாங்கள் அளிக்கும் மருத்துவத்தை அவனது உடல் ஏற்க மறுத்துவிட்டது என்ற பூடக மொழியில் ஆள் செத்துப் போய்விட்டானென்ற துக்கச்செய்தியும் அரசு மருத்துவமனையில் 8 மணி நேரக் காத்திருப்புக்குப் பின் முதன் முதலாக எனக்குத்தான் சொல்லப்பட்டது. பொட்டலமாய்க் கிடைத்தவனை குழிக்குள் இறக்கி வைத்து கடைசியாக முகம் பார்ப்பவர்கள் என்ற வரிசையில் முதல் ஆளாக நின்றதும் நான் தான். ஆனால் அவனின் மரணம் ஒருபோதும் தற்கொலையல்ல என்ற தீர்க்கமான முன்முடிவுட...
எட்டுத்திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன். காவல்,கற்பு, குளம் ,பெருமை என்ற சொற்கள் எல்லாம் மனித அகராதியில் என்று வந்து சேர்ந்தவை என்று தெரியவில்லை. சொற்கள் மட்டுமே மேலும் மேலும் சேர்ந்திருக்க வேண்டும் கரையான் புற்று வளர்வதைப்போல. சொற்களுக்கு அச்சப்பட்டுப் பதுங்கித் திரியும் மனிதன் சொற்களைத் தூக்கித் தூர ஏறிய முடியாமல், சொற்களை சுமந்து திரியும், முகமூடியாய் அணிந்து திரியும், வெறுமனே வாயிலிட்டு வெற்றிலை பாக்கு போலக் குதப்பித் திரியும் மனிதன். தொண்டைக்கும் சிக்கிக் கொண்ட மீன்முள் போல தோற்றம் கொடுப்பன சொற்கள். - நாவலிலிருந்து... இப்படியாகச் விளைவுகளறியாமல் ஏவப்பட்ட சிலபல விசச் சொற்களின் வழியே சாதி மீறலாகவும் இளமைத் துணிவாகவும் குலக் குற்றமாகவும் மாற்றப்பட்ட - செய்யாத ஒரு - பாவத்துக்கு சாதிக் காப்பாளர்களால் வன்மமாகத் தண்டிக்கப்பட, அதற்கு பதிலடியாக வேண்டுமென்றே ஒரு பாவம் செய்துவிட்டு தாய் தந்தையை பிரிந்து படிப்பைப் பாதியில் விட்டுட்டு ஊர் விட்டு நீங்கி ஊர்ஊராய் போய் கூரைக்கும் கஞ்சிக்கும் வழில்லாமல் கொடும்பாடுபட்டுப் பிழைக்கும் இளைஞனின் கதையே இந்நாவல். வாழ்க்கையென்பது எட்டுத்திக்கும் ...
அகாலம் - கே.என்.செந்தில் எழுத்தாளர் - "நான் சில கதைகள் சொல்றேன். கதை மட்டும் சொல்றேன். அதுக்குள்ள என்னோட அனுபவக் கருத்திருக்கா அல்லது அது உன் அறிவைச் சோதிக்குமா என்றெல்லாம் நீயே படிச்சுத் தெளிஞ்சுக்கோ. அதையும் நானே வரிக்கு வரி சொல்ல மாட்டேன்" என்ற முன்கூட்டிய திட்டமிடலோடோ அல்லது இயல்பாகவோ அமைந்து விட்ட 5 கதைகள் கொண்ட தொகுப்பு. ஒரே ஒரு வரி கூட கதைக்கு வெளியே எழுதப்படவில்லையென்பதே இதன் ஆச்சர்யம். வாழ்வு என் கருத்தைச் சொல்கிறேன் கேள் என்று கதைக்கிடையே தன் மேதமைப் பிரசங்கங்களை நிகழ்த்தாமல் கதையை மட்டுமே சொல்லிச் சென்றிருக்கிறார். இது பிரசங்கங்கள் கூடிப்போனதால் உண்டாகும் அலுப்பைவிட குறைவாக இருப்பதால் தடையற்ற வாசிப்புக்கு நல்லதாகவே படுகிறது. 3 கதைகளில் பொருந்தாக் காமமும் அதனியல்பாக நிகழும் மீறலும் சுகம் கண்ட மயக்கத்திலாழ்ந்திருந்த வேளையில் வெளிப்படும் தெளிவும் பின்வாங்கலும் அதன் பிறகான விலகலும் தனிமையும் இயலாமையும் அன்பின்மையும் ஒன்று சேர்ந்து வெளிப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் எப்படியாவது வாழ்வைக் கடத்திவிட வேண்டுமென்ற சுயநல எண்ணத்தைத் தவிர வேறொரு காரணியாக என்ன இருந்திடப...
Comments
Post a Comment