நீ என்பது எனக்கு
தனித்து கரையில் அமர்ந்திருக்கும்
பசித்த உயிரை
இரை காட்டி அழைக்கும் தெப்பம்
நானோ
நீ தரும் மாமிசம் உண்டு
உயிர்த்திருக்குமுன் வளர்ப்பு விலங்கு
- ஸ்ரீசங்கர்
சாம்ராஜ் அவர்களின் முந்தைய தொகுப்பாப " பட்டாளத்து வீடு " கொடுத்த நிறைவில் அடுத்த தொகுப்பு மிக ஆர்வமாக வாங்கி வாசித்தேன் . வேகமான நடையில் எழுதப்பட்டதும் முன்பே சொல்லப்பட்டதுமான கதைகள் தான் . மிகச் சிறிய சொற்றொடர்களில் எழுதி எழுதிச் சேர்த்த கதைகள் நம்மகிட்ட ஒரு ஆள் தலைப்புச் செய்தி வாசிக்கிற டோன்ல விவரிக்கிற மாதிரியே இருக்கிறது . அதனால் வாசிக்கும் போது நமக்கும் களம் விரைவாக உள்ளுணரப்பட்டு யதார்த்தமான காட்சியா விரிய ஆரம்பிச்சிடுது . கதைகளில் குறையாகவும் அதுவே தெரிகிறது . நிதானமில்லாமல் வேகவேகமாகக் கதை சொல்லிவிட்டு ஓடுகிறாப்போல் இருப்பதால் நாம் கதையை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை . அப்புறம் ஜார் ஒழிக கதைய சம்பந்தப்பட்டவங்க இன்னும் பரவலா வாசிக்கல போல ... சாம்ராஜ் இன்னும் தடையவோ நாடுகடத்தலையோ சந்திக்காம இருக்காரே ... இந்த வார்த்தையைச் சொல்வதற்கு நீங்கள் என்னை மன்னிக்கத்தான் வேண்டும் தோழர் கணேசன் அவர்களே ... " ஓம்லக்க " வாழ்க
வெண்ணிலை - சு. வேணுகோபால் கைவிடப்பட்டவர்களின் கதைகள். மழையால், விவசாயத்தால், ஊரால், குடும்பத்தால், உறவுகளால்,காதலால் என அனைத்திலும் கைவிடப்பட்டு வாழ்க்கையை விரக்தியுடனோ அல்லது அவ்விரக்தியிலிருந்து மீள சிறுபெரு நம்பிக்கைகளுடனோ அல்லது மீறல்களுடனோ வாழ்ந்து தீர்ப்பவர்களின் கதைகளாகவே தொகுப்பு முழுவதுமிருக்கிறது. வாசித்த முதல் கதையே - உயிர்ச்சுனை - ஆழ்துளைக்கிணறு தோண்டியாவது தன் நிலத்தையும் வாழ்வையும் காத்துக்கொள்ள எண்ணி அரும்பாடு பட்டு ஆழ்துளை கிணறு தோண்டி அது நீரின்றிப் பொய்த்துப் போகிற சோகத்தோடு முடிகிற கதை. விவசாயத்தின் விவசாயிகளின் இன்றைய நிலைமை ஒரே கதையில் அறிந்து கொள்ளலாம். உள்ளிருந்து உடற்றும் பசி - திருமணமாகா அண்ணன் தங்கைகளின் மீது பாலியல் சீண்டலைத் தொடுப்பதான கதை. அதிர்ந்தே விட்டது கடைசி வரியில். வெண்ணிலை - யாரும் துணையில்லா முன்பின் பழக்கமில்லா நகரத்தில் இறந்த தந்தையின் பிணத்தை வைத்துக் கொண்டு அடுத்தென்ன செய்ய என்றறியாமல் நிற்கும் ஒரு பெண்ணிற்கு அவள் முன்பு வேலை பார்த்த கடைக்கு வந்து போன சில இளைஞர்களால் உதவி கிடைத்து வீடுபோய்ச் சேர்வதான கதை. புத்துயிர்ப்பு - மழ...
ஒரு பெருந்தொற்று பாவம் பார்த்து விட்டுப் போனதின் எச்ச மிச்சமாய்க் கிடக்கும் எனக்கு இதற்கு முன் எத்தனையோ முறை எதேதெற்கோ வீழ்ந்து துவண்ட போதெல்லாம் தன் " பக்கக்கரங்கள் " நீட்டி சுவீகரித்துக்காத்துக் கொண்டதைப் போல இனியும் வழக்கம் போல் புத்தகங்கள் தான் மறு உயிரளிக்கப் போகிறதென்ற முடிவிற்கு வந்த பின் கையிலெடுத்த முதல் புத்தகமே விதவிதமான கதைக்களங்களின் தேர்விலும் தேர்ந்த கதைகளுக்குத் தகுந்த மொழியும் எழுத்துமாகச் சேர்ந்து புத்துயிர்ப்பிலும் தெளியாத புதிர்ப்பாதையும் புராதன ரகசியங்களுக்குள் திறக்கும் புதியதொரு கதவையும் இன்னதென்றறியாத இளம்பிராயத்தின் இனியொருபோதும் திரும்பாத இனிமைகளையும் தோல்விகளுக்கு இடையில் பெறும் இடைவெளிகளையே ஆசுவாசமாய் எண்ணி வாழும் இன்னல்கள் நிறைந்த நடுத்தரக் கிராம மனங்கள் எதிர்கொள்ளும் குழப்பங்களையும் இழப்பையும் குடும்ப உறவுகளின் அன்பில் விளையும் நெருக்கத்தையும் அவர்கள் துயருறுகையில் அதைத்தடுக்கக் கைநீளாத இயலாமையில் துவளும் மனதையும் மதுமயக்கத்தில் சரிக்கும் தவறுக்குமான தராச...
Comments
Post a Comment