நீ என்பது எனக்கு
தனித்து கரையில் அமர்ந்திருக்கும்
பசித்த உயிரை
இரை காட்டி அழைக்கும் தெப்பம்
நானோ
நீ தரும் மாமிசம் உண்டு
உயிர்த்திருக்குமுன் வளர்ப்பு விலங்கு
- ஸ்ரீசங்கர்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Comments
Popular posts from this blog
-
வெண்ணிலை - சு. வேணுகோபால் கைவிடப்பட்டவர்களின் கதைகள். மழையால், விவசாயத்தால், ஊரால், குடும்பத்தால், உறவுகளால்,காதலால் என அனைத்திலும் கைவிடப்பட்டு வாழ்க்கையை விரக்தியுடனோ அல்லது அவ்விரக்தியிலிருந்து மீள சிறுபெரு நம்பிக்கைகளுடனோ அல்லது மீறல்களுடனோ வாழ்ந்து தீர்ப்பவர்களின் கதைகளாகவே தொகுப்பு முழுவதுமிருக்கிறது. வாசித்த முதல் கதையே - உயிர்ச்சுனை - ஆழ்துளைக்கிணறு தோண்டியாவது தன் நிலத்தையும் வாழ்வையும் காத்துக்கொள்ள எண்ணி அரும்பாடு பட்டு ஆழ்துளை கிணறு தோண்டி அது நீரின்றிப் பொய்த்துப் போகிற சோகத்தோடு முடிகிற கதை. விவசாயத்தின் விவசாயிகளின் இன்றைய நிலைமை ஒரே கதையில் அறிந்து கொள்ளலாம். உள்ளிருந்து உடற்றும் பசி - திருமணமாகா அண்ணன் தங்கைகளின் மீது பாலியல் சீண்டலைத் தொடுப்பதான கதை. அதிர்ந்தே விட்டது கடைசி வரியில். வெண்ணிலை - யாரும் துணையில்லா முன்பின் பழக்கமில்லா நகரத்தில் இறந்த தந்தையின் பிணத்தை வைத்துக் கொண்டு அடுத்தென்ன செய்ய என்றறியாமல் நிற்கும் ஒரு பெண்ணிற்கு அவள் முன்பு வேலை பார்த்த கடைக்கு வந்து போன சில இளைஞர்களால் உதவி கிடைத்து வீடுபோய்ச் சேர்வதான கதை. புத்துயிர்ப்பு - மழ...
லிலித்தும் ஆதாமும் - நவீனா பெண்ணியம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு பெண்ணியம் என்பது "தன் பாலினத்தின் மீதான அன்பும் மற்ற பாலினத்தை மீதான புரிதலும் தான்" என்ற எளிய விளக்கத்தோடு தொகுப்பைத் தொடங்கியிருப்பதே மிகப் பெரிய ஆறுதலையும் வாசிப்பு ஊக்கத்தையும் அளித்தது. 23 தலைப்புகளில் பெண்,பெண்ணியம், பெண் உளவியல், பெண்சார்ந்த குடும்ப,சமூக,பொருளாதாரப் பார்வைகள், விமர்சனங்கள்,அடக்குமுறைகள் , பெண் உடல் குறித ்த தோற்ற மயக்கங்கள்,ஆண்-பெண் சகோதர உறவில்,திருமண பந்தத்தில், குழந்தைப் பேற்றில் உருவாகும் உடல்நிலைச் சிக்கல்கள், குழந்தையற்ற பெண்களின் மீது கொண்டவனும் குடும்பமும் சமூகமும் நடத்தும் கூட்டு வன்மங்கள், குழந்தை வளர்ப்பில், குடும்ப பராமரிப்பில், விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து அதில் பயணித்தல்களில்,தகுதிக்கேற் ற பணியைத் தேர்ந்தெடுத்தலில்,பணிக்குப ் போவதில், ஊதிய வேறுபாடுகளில்,சொத்துப் பகிர்வில் நிலவும் உரிமை மீறல்கள் என அனைத்து பாலின சமநிலையற்ற போக்குகள், இயற்கை உட்பட இந்த உலகின் அத்தனையும் பெண்ணுக்கெதிராகாக் காட்டும் கொடூர முகங்கள்,தெய்வ வழிபாடுகளில் பெண்ணுக்குச் சமயங்களின் ஒரவஞ்...
சிலிர்ப்பு - தி. ஜானகிராமன் கோபுரத்துடன் சந்நிதி சங்கீதம் காவிரி வெற்றிலைச் சீவல் காபி ரயில் குளம் அதீத ரசனையுடன் படைக்கப்பட்ட ஏராளமான பெண்கள் அவர்களைச் சுற்றி வாழும் ஆண்கள் வாழ்ந்து நிறைந்த கிழவர்கள் தீர்வுதேடும் மனச்சிக்கல்கள் நிறைய அறம்கொண்ட மனிதர்கள் இவைகள் தான் இந்தத் தொகுப்பு முழுக்க. வாசிக்க வாசிக்கத் திகட்டாத இவ்வளவு சுகமான எழுத்து நடை. திண்ணையிலமர்ந்து கொண்டு ஒரு மூத்தவரிடம் கதை கேட்பது போலான சுகத்தில் அவர்சமூக மக்களின் வாழ்க்கையை அத்தனை உன்னிப்பான கவனிப்போடு பதிவு செய்திருக்கிறார். நீட்ட வேண்டிய இடத்தில் கொஞ்சம் நின்று நிதானமாகவும் சுருக்கிய சொற்களில் பட்டென்றும் பேசிச் செல்லும் எழுத்தாளுமை வியப்பு. தி.ஜா.வின் தனித்தன்மையை யாரும் நெருங்க முடியாதபடிக்குப் பார்த்தும் கொள்வது அவரின் எளிமையான உரையாடல்களில் மறைந்திருக்கும் அழுத்தமான சொற்களில் அமைக்கப்பட்ட நுட்பமான பார்வைகள் தான். 29 கதைகள். 29 கருத்து. அப்படியெல்லாம் இல்லை. ஒரே முழக்கம் மனிதம் மட்டுமே. அதை விதவிதமான மனிதர்களின் கீழ்மைகளுக்கும் மேன்மைகளுக்கும் இடையிலாக ஓடும் நதி போல காட்டுகிறார். ஒரே ஆள் சில...
Comments
Post a Comment