ஆதவன் கதைகள்
"வித்தியாசங்கள் தான் ரசனையையும் கவர்ச்சியையும் தூண்டுகிறது. உலகைப் படைக்கின்றன. வித்தியாசங்கள் தான் வெறுப்பையும் தூண்டுகிறது. உலகை அழிக்கின்றன". - ஆதவன்.
***
ஆதவன் அவர்கள் கதைகள் எழுதிய காலத்தையும் அக்கதைகளுக்கான வயதையும் இத்தனை ஆண்டுகள் கழித்தும் மாயாத புத்துணர்ச்சியையும் நம்பத்தான் மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கிறது. மனித மனதை ஊடறுத்துச் சென்று உட்தளங்களைத் துளைத்துக் கண்டுவிடத் துடிக்கும் அவரது கலைநோக்கு காலங்கள் கடந்தும் அத்தனை வெளிச்சத்தோடு பாய்கிறது. அந்த வெளிச்சம் நிஜங்களின் பிம்பமாகப் படியும் நிழலிலிருக்கும் உண்மைகளையும் போலித்தனங்களையும் உருமாற்றம் செய்து காணச் சொல்கிறது. கண்டு தெளிய முயற்சிப்போம்
Comments
Post a Comment