பிடிமண் - முத்துராசா குமார்

"1 ரூபாய் சூடத்தீ உடம்பு" இந்த ஒரு வரியை எப்படிச் சிந்தித்திருப்பார் என்றே இரண்டு நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். காலம் முழுக்க மறக்காது இந்த வரி. மரபுக்குத் திரும்புதலை ஒரு பேஷன் போல ஆபாசமான வர்த்தகமாக மாற்றத் தொடங்கி அவலமாய்ப் பைநிறைத்துக் கொண்டிருக்கும் காலத்தில் உண்மையாகவே மரபென்பது பழமையைக் கொண்டாடுதல் அல்ல கைமாற்றுவதுதான் என்பதை நாம் இன்று இழந்து நிற்கும் நிலம், பண்பாடு , கல்வி, கலை, வழிபாடு, விவசாயம், உள்ளிட்ட அனைத்தின் அழிவிலும் கண்டுகொள்ளலாம். அந்தப் பூர்வீக நினைவுகளை சூடு குறைந்த பின்னும் சொத்தென்று கைப்பற்றியிருக்கும் பிடிமண்ணில் பதியமிட்டுருக்கிறார்

Comments

Popular posts from this blog

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.