உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.

 காலையில் எழுந்து குளித்து சாப்பிட்டு அலுவலகம் போய் 8-10 மணி நேரம் வேலை செய்து விட்டு மாலை வீட்டுக்கு வந்து 4-6 பேர் கொண்ட குடும்பத்தாரோடு கழித்தும் எப்போதாவது சந்திக்கும் நண்பர்களோடு பேசிச் சிரித்தும் அலுவலக வேலைக்காக வெளியே செல்கையில் தொடர்ச்சியாக கண்ணில் படுகிற ஆட்களோடு செலவழித்தும் தான் கழிகிறது நம் பெருமாலான நாட்கள். இதில் இன்னொரு மனிதனை கூர்ந்து கவனிக்கவோ அவனைப்பற்றி சிந்திக்கவோ நேரமும் சூழலும் இல்லாத நெருக்கடியில் தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். 

 எந்த ஒரு மனிதனுக்கும் ஆசைப்பட்ட வாழ்வென்பதற்கும் திணிக்கப்பட்ட வாழ்வென்பதற்கும் இடையில் எழும் விரக்தியும் வெறியும் வலியும் ஆசையும் ஏதாவது ஒரு மீறலை நிகழ்த்திப் பார்த்து தான் அனுபவிக்க வேண்டிய ருசியைக் காணச் சொல்கிறது. இப்படியாக அனைவரது நெருக்கடிகளையும் ருசிகாணும் ஆசையையும் பயன்படுத்திக் கொண்டும் பணப்படுத்திக் கொண்டு வாழ்வதும், குற்றம் என்பதை குற்றமாகவே கருத மனதும் வாய்ப்பும் வராத அல்லது வந்தாலும் அதற்காக பெரிதாக அலட்டிக் கொள்ளாமலும் தன் வாழ்வுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அழுத்தத்துக்கு உள்ளாகி ஆட்டுவிக்கும் மற்றும் ஆடும் மறைமுக வாழ்வு வாழும் ஆட்கூட்டத்தின் அவலக் கதையே நாவல். 

 திருடுவதோ, போதைப் பொருள் விற்பதோ, விபச்சாரத் தொழில் செய்வதோ, காமத்துக்காகத் தன்னையே இழப்பதோ, குழந்தைகளைக் கடத்தி விற்பதோ, ஏன் தன் மனைவியையே காசுக்காக விட்டுக் கொடுப்பதும் என நீளும் மீறல்களைச் செய்பவர்கள் மிக இயல்பான மன நிலையையே கொண்டிருக்கும் அளவுக்கு அவர்கள் அன்றாடங்களைக் கடத்தவும் இந்த பலவீனமனவர்களைக் கைக்கொண்டே பணமும் பலமும் படைத்த அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளவும் பழக்கப்பட்டு வெறிகொண்ட மிருகங்களாகிறார்கள். 

 மனித மனம் ஆசைப்படும் அனைத்தையும் அடைந்து பார்த்துவிடத் துடிக்கும் செயல்களைச் செய்து பார்ப்பதாக விரியும் கதை சமூகத்தில் விளிம்பு நிலை என்பதன் மீதான விமர்சனப் பார்வையை கூர்மையாக்குகிறது. அந்த விளிம்பு யாரால் உருவாக்கப்படுகிறது ? அந்த விளிம்பில் யாரெல்லாம் இருக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் ? விளிம்பில் இருப்பவர்களால் மையத்தில் இருப்பவர்கள் அடைகிற லாபம் என்ன? அந்த லாபத்தில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு? அதே நேரத்தில் அதன் பின் வரும் பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்பதில் பங்குவிகிதம் எத்தனை ? என்று கேள்விகள் தொடர்ந்து தலையைக் குடைகிறது. 

 "கொலைசெய்வதற்கும் கொலைசெய்யப்படுவதற்கும் இடையிலான வாழ்க்கையைத் தான் அனைவரும் வாழ்கிறோம்" என்ற வரிகளைச் சாதாரணமாகக் கடக்க முடியவில்லை. இப்படி நாவல் முழுக்க அபாரம் எனவும் அதிரவைத்தும் வியக்க வைக்கும் பல வரிகளால் பல நகரத்துடையதும் அந்நகர நெரிசல்களில் துண்டாடப்படும் மனிதர்களின் இருட்பக்கங்கள் விரியும் கதைக்கு கதாபத்திரங்கள் நாம் மறைத்து வைத்திருக்கும் முகமூடிகளுக்குள்ளிருந்து உருப்பெறுபவையே

Comments

Popular posts from this blog