தீம்புனல் - ஜி. கார்ல் மார்க்ஸ். வாழ்வாங்கு வாழவைத்த வயலும் தோப்பும் குடியிருப்பு நகரான எதார்த்தச் சித்திரம். அதில் இயற்கையின் மீதான நேசமும் சக மனித அன்பும் சரிந்த கதை. வானுக்குக் கீழுள்ள அனைத்து உயிர்களுக்கும் அமிர்தமான மழை பொய்த்து விவசாயம் அழிந்து போகிறபோது சமூகம் அடையும் அகபுற மாற்றங்கள் , நிலம் மற்றும் சூழல் அடையும் உருமாற்றங்கள், நீராதாரப் பாழ்படல்கள், தொழில் நெருக்கடிகள் - போட்டிகள், பொ ருளாதாரப் பின்னடைவுகள், அதனுள் முளைக்கும் ஏற்றத்தாழ்வுகள், இடப்பெயர்வுகள், அதில் சோமு என்ற மூத்த குடியானவரின் குடும்பம் பாதிக்கப்பட்டு அவர்கள் பண்ணையம் பார்த்து வந்த நிலம் கைவிட்டுப்போவது சார்ந்த பிரச்சினைகள், அவரின் தம்பி குடும்பத்தின் கணவன் - மனைவி அதிகாரக் கூச்சல்களில் சிக்கி அழியும் வாழ்வு, பறிபோகிற உயிர்கள், சோமு குடும்ப உறவுகளுக்குள் நேர்கிற சொத்துப் பகிர்வுகள் தொடங்கிய மனஸ்தாபங்கள், அடுத்து என்னவென்று அறியாத அலைக்கழிப்புகள்,வாழ்வியல் தேவைகளுக்காக விவசாயத்தை விட்டு வெளியேறிப்போய்த் தேடிக் கொண்ட தேற்றுதல்கள், அடுத்தடுத்த தலைமுறைகளின் கேள்விக்குள்ளாகும் எதிர்காலங்கள், பிழைப்புக்கான அல்லல்...
Comments
Post a Comment