வீடென்ப-தேவிபாரதி
வீடென்ப தொகுதியின் முன்னுரையில் தேவிபாரதி பின்வருமாறு குறிப்பிடுகிறார் ...
" யாராவது ஒரு வாசகர் இருபதாண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய சிறுகதையை வாசித்து விட்டு இன்றைக்கும் அதைப் பற்றிப் பகிர்கிறார், எனைக்காணும் சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போது நெருங்கி நின்று என்கைகளை மிருதுவாகப் பற்றிக் கொள்கிறார்."
அவர் குறிப்பிட்ட அந்த வாசகர் இன்றைக்கு நான் தான்.
தொடங்கி வளர்ந்து முடியும் வரை உள்ளூர ஒரு சீரான அதிர்வையும் தீவிரத்தையும் உணர்த்தி வாசிக்க வாசிக்க பித்துப் பிடிக்கச் செய்துவிடும் எழுத்தைக் கொண்ட கதைகள் நிறைந்த இரு தொகுப்புகளையும் வாசித்து முடித்ததும் இத்தனை நன்றாக எழுதுபவர்கள் ஏன் நிறைய எழுதுவதில்லை என்ற விடையற்ற கேள்வி எனக்கும் தோன்றாமலில்லை
வெண்ணிலை - சு. வேணுகோபால் கைவிடப்பட்டவர்களின் கதைகள். மழையால், விவசாயத்தால், ஊரால், குடும்பத்தால், உறவுகளால்,காதலால் என அனைத்திலும் கைவிடப்பட்டு வாழ்க்கையை விரக்தியுடனோ அல்லது அவ்விரக்தியிலிருந்து மீள சிறுபெரு நம்பிக்கைகளுடனோ அல்லது மீறல்களுடனோ வாழ்ந்து தீர்ப்பவர்களின் கதைகளாகவே தொகுப்பு முழுவதுமிருக்கிறது. வாசித்த முதல் கதையே - உயிர்ச்சுனை - ஆழ்துளைக்கிணறு தோண்டியாவது தன் நிலத்தையும் வாழ்வையும் காத்துக்கொள்ள எண்ணி அரும்பாடு பட்டு ஆழ்துளை கிணறு தோண்டி அது நீரின்றிப் பொய்த்துப் போகிற சோகத்தோடு முடிகிற கதை. விவசாயத்தின் விவசாயிகளின் இன்றைய நிலைமை ஒரே கதையில் அறிந்து கொள்ளலாம். உள்ளிருந்து உடற்றும் பசி - திருமணமாகா அண்ணன் தங்கைகளின் மீது பாலியல் சீண்டலைத் தொடுப்பதான கதை. அதிர்ந்தே விட்டது கடைசி வரியில். வெண்ணிலை - யாரும் துணையில்லா முன்பின் பழக்கமில்லா நகரத்தில் இறந்த தந்தையின் பிணத்தை வைத்துக் கொண்டு அடுத்தென்ன செய்ய என்றறியாமல் நிற்கும் ஒரு பெண்ணிற்கு அவள் முன்பு வேலை பார்த்த கடைக்கு வந்து போன சில இளைஞர்களால் உதவி கிடைத்து வீடுபோய்ச் சேர்வதான கதை. புத்துயிர்ப்பு - மழ...

Comments
Post a Comment