வீடென்ப-தேவிபாரதி
வீடென்ப தொகுதியின் முன்னுரையில் தேவிபாரதி பின்வருமாறு குறிப்பிடுகிறார் ...
" யாராவது ஒரு வாசகர் இருபதாண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய சிறுகதையை வாசித்து விட்டு இன்றைக்கும் அதைப் பற்றிப் பகிர்கிறார், எனைக்காணும் சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போது நெருங்கி நின்று என்கைகளை மிருதுவாகப் பற்றிக் கொள்கிறார்."
அவர் குறிப்பிட்ட அந்த வாசகர் இன்றைக்கு நான் தான்.
தொடங்கி வளர்ந்து முடியும் வரை உள்ளூர ஒரு சீரான அதிர்வையும் தீவிரத்தையும் உணர்த்தி வாசிக்க வாசிக்க பித்துப் பிடிக்கச் செய்துவிடும் எழுத்தைக் கொண்ட கதைகள் நிறைந்த இரு தொகுப்புகளையும் வாசித்து முடித்ததும் இத்தனை நன்றாக எழுதுபவர்கள் ஏன் நிறைய எழுதுவதில்லை என்ற விடையற்ற கேள்வி எனக்கும் தோன்றாமலில்லை
சிலிர்ப்பு - தி. ஜானகிராமன் கோபுரத்துடன் சந்நிதி சங்கீதம் காவிரி வெற்றிலைச் சீவல் காபி ரயில் குளம் அதீத ரசனையுடன் படைக்கப்பட்ட ஏராளமான பெண்கள் அவர்களைச் சுற்றி வாழும் ஆண்கள் வாழ்ந்து நிறைந்த கிழவர்கள் தீர்வுதேடும் மனச்சிக்கல்கள் நிறைய அறம்கொண்ட மனிதர்கள் இவைகள் தான் இந்தத் தொகுப்பு முழுக்க. வாசிக்க வாசிக்கத் திகட்டாத இவ்வளவு சுகமான எழுத்து நடை. திண்ணையிலமர்ந்து கொண்டு ஒரு மூத்தவரிடம் கதை கேட்பது போலான சுகத்தில் அவர்சமூக மக்களின் வாழ்க்கையை அத்தனை உன்னிப்பான கவனிப்போடு பதிவு செய்திருக்கிறார். நீட்ட வேண்டிய இடத்தில் கொஞ்சம் நின்று நிதானமாகவும் சுருக்கிய சொற்களில் பட்டென்றும் பேசிச் செல்லும் எழுத்தாளுமை வியப்பு. தி.ஜா.வின் தனித்தன்மையை யாரும் நெருங்க முடியாதபடிக்குப் பார்த்தும் கொள்வது அவரின் எளிமையான உரையாடல்களில் மறைந்திருக்கும் அழுத்தமான சொற்களில் அமைக்கப்பட்ட நுட்பமான பார்வைகள் தான். 29 கதைகள். 29 கருத்து. அப்படியெல்லாம் இல்லை. ஒரே முழக்கம் மனிதம் மட்டுமே. அதை விதவிதமான மனிதர்களின் கீழ்மைகளுக்கும் மேன்மைகளுக்கும் இடையிலாக ஓடும் நதி போல காட்டுகிறார். ஒரே ஆள் சில...

Comments
Post a Comment