பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்- மயிலன் ஜி சின்னப்பன் காரணம் தெரியாத மரணமொன்றின் பலியாய் மறைந்த ஆளின் கதையொன்று எங்கள் வீட்டிலும் இருக்கிறது. நேற்றைக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கழிந்த அவனின் மரணக்காரணம் இன்றைக்கு வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. வேலைக்குப் போன இடத்தில் மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டானென்ற முதல் தொலைபேசி எனக்குத்தான் வந்தது. உயர் சிகிச்சைக்கு வேண்டி (உயிர் இருக்கிறதா என்றறியாத மர்மங்களுடன்) தனியார் மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றும் செய்தி எனக்குத்தான் முதலில் சொல்லப்பட்டது. எத்தனையோ முயன்று பார்த்து விட்டோமென்றும் நாங்கள் அளிக்கும் மருத்துவத்தை அவனது உடல் ஏற்க மறுத்துவிட்டது என்ற பூடக மொழியில் ஆள் செத்துப் போய்விட்டானென்ற துக்கச்செய்தியும் அரசு மருத்துவமனையில் 8 மணி நேரக் காத்திருப்புக்குப் பின் முதன் முதலாக எனக்குத்தான் சொல்லப்பட்டது. பொட்டலமாய்க் கிடைத்தவனை குழிக்குள் இறக்கி வைத்து கடைசியாக முகம் பார்ப்பவர்கள் என்ற வரிசையில் முதல் ஆளாக நின்றதும் நான் தான். ஆனால் அவனின் மரணம் ஒருபோதும் தற்கொலையல்ல என்ற தீர்க்கமான முன்முடிவுட...
Popular posts from this blog
கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார்.
கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார். புதியதொரு வாழ்வனுபவம் .... நான் வாழும் சூழலிருந்து மாறுபட்ட ஒரு வாழ்க்கைய கற்பனையாக வாழ்ந்து பார்த்திட வேண்டுமென்ற ஆசையில் தான் நான் பெரும்பாலும் வாசிக்கவே செய்கிறேன். தொடர்ந்து அவ்வகை அனுபவங்களைக் கொடுக்கும் புத்தகங்களையே தேர்வு செய்து வாசித்தும் வருகிறேன். அப்படியான வகையில் மலையை நம்பி மலைக்கு மேலேயும் கீழேயும் வாழும் மக்களின் வாழ்வியலைப் பற்றிய இந்தக் கதை அம்மக்களோடு ஒருவனாக அவர்களின் நல்லது கெட்டதுகளை மலையிலும் தரைக்காடகாட்டிலிருந்து கழுதைகளோடு பயணப்பட்டுக் கொண்டே கிட்ட இருந்து பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது. சாதியத்தின் கீழ்மைகளும், சமூக - பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் விளையும் ஏகாதிபத்திய - அடிமை மனோபாவ இயல்புகளும் பெரும் உருவெடுத்து நின்றாடிய காலத்தைத்தான் பழையகாலம் என்பதை, எந்த மறுமலர்ச்சிப் பாதைகளும் கண்டடைந்திராத, எந்த பொதிச்சுமையும் குறைந்தடாத கழுதையினும் தாழ்ந்தபடி வாழும் இக்காலத்திலும் நம்ப மறுக்கிறது மனம். வருடத்துக்கு ஒரு முறை தானென்றாலும் மணிக்கணக்கில் காத்திருந்து உண்ணும் இட்லிக்குக் கொஞ்சம் கூடுதலாகச் சாம்பார் கேட்டவர்கள் மீத...
ராக்கெட் தாதா - கார்ல் மார்க்ஸ் இந்தத் தொகுப்பை ஏன் நிறைய பேர் பரிந்துரை செய்தார்களென்ற விளக்கத்துக்கு சில கதைகளே பதிலாகப் போதுமென்றிருக்குறது. நிழல் என்ற கதையைத்தான் முதலில் படித்தேன். மனதில் மிகவும் பாதிப்பை உண்டாக்கிவிட்டது அந்த ஒரு கதையே. மொத்தத் தொகுப்பின் முழுப்பதமறிய அந்த ஒரு கதையே போதுமாயிருந்தது. கதை முடியும் போது சந்திராவுக்காகவும் இறந்துவிட்ட அவரின் மகனுக்காகவும் கண்ணீர் துளிர்த்திர ுந்தது. சித்திரங்கள் - நாம் இழந்து வரும் அல்லது நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நமக்கு சகஜமாக்கப்பட்டு வரும் குடும்ப உறவின் சிதைவுகளை அத்தனை நிகழ்கால உண்மைகளோடும் உளவியலோடும் கூறுகிறது. பெண்ணின் மீறல்களுக்கு கேள்வி கேட்கும் ஆண் மனம் ஆணின் மீறல்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளுமா என்ற கேள்வியை நம்முள் ஏற்படுத்தி முடிகிறது கதை. சுமை - ஒரு முக்கோணக் காதல் கதை முடிவில் ஒரு பச்சிளங்குழந்தையின் மறைவில் ஒரு மிகப்பெரிய இழப்பையும் குற்றத்தையும் கைக்கொண்டதில் ஒரு ஒழுங்கான வழிக்கு வரும் போது உண்மையான காதல் சிறைக் கம்பிகளுக்கிடையில் துளிர்க்கிறது. கிறக்கம் - சாராயம் குடிப்பதின் சல்லாபப் பக்கங்களை பெரும் நகை...
Comments
Post a Comment