உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.
உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார். காலையில் எழுந்து குளித்து சாப்பிட்டு அலுவலகம் போய் 8-10 மணி நேரம் வேலை செய்து விட்டு மாலை வீட்டுக்கு வந்து 4-6 பேர் கொண்ட குடும்பத்தாரோடு கழித்தும் எப்போதாவது சந்திக்கும் நண்பர்களோடு பேசிச் சிரித்தும் அலுவலக வேலைக்காக வெளியே செல்கையில் தொடர்ச்சியாக கண்ணில் படுகிற ஆட்களோடு செலவழித்தும் தான் கழிகிறது நம் பெருமாலான நாட்கள். இதில் இன்னொரு மனிதனை கூர்ந்து கவனிக்கவோ அவனைப்பற்றி சிந்திக்கவோ நேரமும் சூழலும் இல்லாத நெருக்கடியில் தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். எந்த ஒரு மனிதனுக்கும் ஆசைப்பட்ட வாழ்வென்பதற்கும் திணிக்கப்பட்ட வாழ்வென்பதற்கும் இடையில் எழும் விரக்தியும் வெறியும் வலியும் ஆசையும் ஏதாவது ஒரு மீறலை நிகழ்த்திப் பார்த்து தான் அனுபவிக்க வேண்டிய ருசியைக் காணச் சொல்கிறது. இப்படியாக அனைவரது நெருக்கடிகளையும் ருசிகாணும் ஆசையையும் பயன்படுத்திக் கொண்டும் பணப்படுத்திக் கொண்டு வாழ்வதும், குற்றம் என்பதை குற்றமாகவே கருத மனதும் வாய்ப்பும் வராத அல்லது வந்தாலும் அதற்காக பெரிதாக அலட்டிக் கொள்ளாமலும் தன் வாழ்வுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அழுத்தத்துக்
Comments
Post a Comment