இடக்கை - எஸ்.ராமகிருஷ்ணன். கதைகளின் மாயக் குடுவை. ஔரங்கசீப்பின் இறுதி நாட்களில் நோய்மையால் ஏற்படும் தளர்வைக் கண்டு அவரே அச்சமுறுவதில் ஆரம்பிக்கும் கதை அவரின் வாரிசுகள், அவரின் மறைவுக்குப் பிறகாக நடத்தும் அதிகாரப் பசிக்கான சண்டைகள், அஜ்யா என்ற ஒருவர் அரசருக்கு நெருக்கமான பணியாளின் வாழ்வு அரசரின் ரகசியங்களறிந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக கொடுமைக்குள்ளாக்கித் தீர்க்கப்படுவதும்,தூமகேது என்ற சாதாரணண ின் வாழ்வு ஒரு புத்தியில்லா மன்னனின் கேடுகெட்ட ஆட்சிமுறையால் பாதிக்கப்பட்டு, அனாதையாக்கப்பட்டு, கடைசி காலம் வரை பல சித்ரவதைக்குள்ளாக்கப் பட்டு குடும்பத்தைப் பிரிந்து வாடும் துர் நிலைக்குத் தள்ளப்படுவதும், பிஷாடன், சனத், சிகிரியர், குலாபி, பறவை மனிதன், என்றோர் பலரின் வாழ்வென புரட்ட புரட்ட பக்கங்கள் தோறும் கதைகள் விரிந்துகொண்டே இருக்கிறது. சிறியதும் பெரியதுமான அத்தனை கதைகள் நிறைந்துள்ளது புத்தகம் முழுவதும். பல கிளைக்கதைகளை ஒரு முக்கியக் கதைக்குப் பக்க பலமாக அடுக்கிக் கொண்டே போகிறார் ஆசிரியர். வாசிப்பின் போது இது யாருடைய கதை என்ற குவியத்தில் நிலைபெறாமல் போகும் அயர்ச்சியைத் தாண்டி இது உலகம் முழுக...
Comments
Post a Comment