நடுகல் - தீபச் செல்வன் 

ஆலயத்தின் படிக்கட்டுகள் முழுக்க அம்மாவின் பிரார்த்தனைகளே கொட்டிக் கிடக்கின்றன.
- நாவலிலிருந்து ஒரு வரி.
அதே போல் தான் வரலாற்றின் வழி நெடுக இழப்பின் வலிமிகுந்த கதைகளே கொட்டிக் கிடக்கின்றது.
கண்ணீரைத் துடைக்க நீளாத எம் கைகளில் வைத்து அக்கதைகளில் வரும் அதிகாரத்தின் கொடுங்கோலர்கள் நிகழ்த்திய மனிதத் தன்மையற்ற செயல்களை உச்சுக்கொட்டிக் கொண்டு வாசிப்பதைத் தவிர வேறென்றும் அறியோம்.
யுத்தத்துக்கு நடுவில் சிதையும் ஒரு குடும்பத்தின் கதை. ஒரு குடும்பமும் ஒரு நாளும் ஒன்றாய்க் கூடி மகிழ்வாய் வாழாத கதை. எறிகணைகளுக்கு நடுவில் துரத்தப்பட்டும் வழியில் கொல்லப்பட்டும் மிச்சமுள்ளோர் முள்கம்பிகளுக்குள் முடக்கப்பட்டும் விவரிக்க இயலாத் துன்பங்களுள்ளும் கழியும் கதை.
ஒரு போட்டோவைக் கூட அவ்வளவு ஏன் ஒரு கல்லைக்கூட தம் மகனின் நினைவாகவோ உருவமேற்றோ அருகே வைத்துக் கொள்ள முடியாத ஒரு கொடுமையையெல்லாம் எம் மக்கள் அடைந்திருக்கிறனர் என்று படித்துத் தெரிந்துகொள்கையில் ஈழ மக்கள் அடைந்ததும் கடந்ததும் சொல்லில் சொல்லி மாளாதவைகளே.
தலைக்கு மேல் தலையிருக்கிறதா என்று தினமும் தொட்டுப் பார்த்து வாழும் சூழலிலும் கல்வியைத் தொடர வற்புறுத்திய இயக்கமும் தொடர்ந்த மக்களும் வணங்கப்பட வேண்டியவர்களே. அக்கல்விதான் அவர்களை இன்று உலகம் முழுக்க போகும் இடமெல்லாம் சிறக்கச் செய்கிறது.
சுதந்திர நாட்டிற்காய்ப் போராட வந்து நடுகல்லாச் சமைந்துவிட்ட அனைத்து வித்துடல்த் தெய்வங்களுக்கும் மரியாதைகளும் வணக்கங்களும்.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.