லிலித்தும் ஆதாமும் - நவீனா
பெண்ணியம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு பெண்ணியம் என்பது "தன் பாலினத்தின் மீதான அன்பும் மற்ற பாலினத்தை மீதான புரிதலும் தான்" என்ற எளிய விளக்கத்தோடு தொகுப்பைத் தொடங்கியிருப்பதே மிகப் பெரிய ஆறுதலையும் வாசிப்பு ஊக்கத்தையும் அளித்தது.
23 தலைப்புகளில் பெண்,பெண்ணியம், பெண் உளவியல், பெண்சார்ந்த குடும்ப,சமூக,பொருளாதாரப் பார்வைகள், விமர்சனங்கள்,அடக்குமுறைகள்
ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு பெருஅதிர்வும், புரிதல்களற்ற மனதின் மீதான சுயகோபமும், மனமுதிர்ச்சிக்கு வேண்டியதைத் தேடும் கட்டாயமும் நிகழ்கிறது.
தொகுப்பின் சிறப்பென என்னளவில் தோன்றியது வழக்கம்போல ஆணாதிக்கத்துக்கெதிரான வசைகள் புகார்கள் என ஒரு சார்பில்லாமல் ஆண்டாண்டு காலமாக பெண்ணியம் பேசுவோர் பேசும் தொனியிலிருந்து சற்றே மாறி ஆண் - பெண் என்ற இரு தரப்பு நியாங்களையும் ஆராய வேண்டுகிறது. அப்படி ஆராய்வதன் மூலமே இங்கே பெண்ணியம் சார்ந்த உண்மையான விடுதலைக்குத் தேவையான தெளிவை நோக்கி நகர முடியுமென தீர்க்கமாக நம்புகிறது.
புதுப் பார்வைகள் என்ற நிலையைத் தாண்டி இங்கே உலகத் தோற்றம் முதல் பெண்ணுக்கெதிராக இருக்கும் நிலைப்பாடுகளில் விமர்சனப் பார்வைகளைப் புகுத்தி எளிய தர்க்கங்கள் வழியாக நியாயமான தீர்வுகளை நோக்கிச் செல்லப் பணிக்கிறது.
பிறப்பு முதல் இறப்பு வரையிலான ஒரு பெண் வாழ்வு குறித்த முன் வரையறைகளைப் பரிசீலனைசெய்யவும் பெண்ணுக்கான உளமார்ந்த தேவைகளான அன்பு, நட்பு, மரியாதை, உரிமை,இணக்கம் முதலியவற்றைக் கொடுத்து சகமனுஷியாக கூட நடைபோட முன்வரவும் வேண்டுகிறது
பெண் என்னளவில் எப்போதும் வணங்கத்தக்கவள்தான். பெண்ணெருக்கம் அதிகமில்லாமல் வளர்ந்த எனக்கு பெண் எப்போதுமே விருப்பத்திற்குரியவள்தான்.
கடைசியாக ஒரு ஆணாக நான் நிறைய திருந்த வேண்டுமெனவும், பெண்ணைப் பார்க்கும் பார்வைகளை மாற்றவும் அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவும் அவர்களின் சுக துக்கங்களில் சமபங்கேற்கவும் சொல்கிறது.
வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment