சிலிர்ப்பு - தி. ஜானகிராமன் கோபுரத்துடன் சந்நிதி சங்கீதம் காவிரி வெற்றிலைச் சீவல் காபி ரயில் குளம் அதீத ரசனையுடன் படைக்கப்பட்ட ஏராளமான பெண்கள் அவர்களைச் சுற்றி வாழும் ஆண்கள் வாழ்ந்து நிறைந்த கிழவர்கள் தீர்வுதேடும் மனச்சிக்கல்கள் நிறைய அறம்கொண்ட மனிதர்கள் இவைகள் தான் இந்தத் தொகுப்பு முழுக்க. வாசிக்க வாசிக்கத் திகட்டாத இவ்வளவு சுகமான எழுத்து நடை. திண்ணையிலமர்ந்து கொண்டு ஒரு மூத்தவரிடம் கதை கேட்பது போலான சுகத்தில் அவர்சமூக மக்களின் வாழ்க்கையை அத்தனை உன்னிப்பான கவனிப்போடு பதிவு செய்திருக்கிறார். நீட்ட வேண்டிய இடத்தில் கொஞ்சம் நின்று நிதானமாகவும் சுருக்கிய சொற்களில் பட்டென்றும் பேசிச் செல்லும் எழுத்தாளுமை வியப்பு. தி.ஜா.வின் தனித்தன்மையை யாரும் நெருங்க முடியாதபடிக்குப் பார்த்தும் கொள்வது அவரின் எளிமையான உரையாடல்களில் மறைந்திருக்கும் அழுத்தமான சொற்களில் அமைக்கப்பட்ட நுட்பமான பார்வைகள் தான். 29 கதைகள். 29 கருத்து. அப்படியெல்லாம் இல்லை. ஒரே முழக்கம் மனிதம் மட்டுமே. அதை விதவிதமான மனிதர்களின் கீழ்மைகளுக்கும் மேன்மைகளுக்கும் இடையிலாக ஓடும் நதி போல காட்டுகிறார். ஒரே ஆள் சில...
Popular posts from this blog
வெண்ணிலை - சு. வேணுகோபால் கைவிடப்பட்டவர்களின் கதைகள். மழையால், விவசாயத்தால், ஊரால், குடும்பத்தால், உறவுகளால்,காதலால் என அனைத்திலும் கைவிடப்பட்டு வாழ்க்கையை விரக்தியுடனோ அல்லது அவ்விரக்தியிலிருந்து மீள சிறுபெரு நம்பிக்கைகளுடனோ அல்லது மீறல்களுடனோ வாழ்ந்து தீர்ப்பவர்களின் கதைகளாகவே தொகுப்பு முழுவதுமிருக்கிறது. வாசித்த முதல் கதையே - உயிர்ச்சுனை - ஆழ்துளைக்கிணறு தோண்டியாவது தன் நிலத்தையும் வாழ்வையும் காத்துக்கொள்ள எண்ணி அரும்பாடு பட்டு ஆழ்துளை கிணறு தோண்டி அது நீரின்றிப் பொய்த்துப் போகிற சோகத்தோடு முடிகிற கதை. விவசாயத்தின் விவசாயிகளின் இன்றைய நிலைமை ஒரே கதையில் அறிந்து கொள்ளலாம். உள்ளிருந்து உடற்றும் பசி - திருமணமாகா அண்ணன் தங்கைகளின் மீது பாலியல் சீண்டலைத் தொடுப்பதான கதை. அதிர்ந்தே விட்டது கடைசி வரியில். வெண்ணிலை - யாரும் துணையில்லா முன்பின் பழக்கமில்லா நகரத்தில் இறந்த தந்தையின் பிணத்தை வைத்துக் கொண்டு அடுத்தென்ன செய்ய என்றறியாமல் நிற்கும் ஒரு பெண்ணிற்கு அவள் முன்பு வேலை பார்த்த கடைக்கு வந்து போன சில இளைஞர்களால் உதவி கிடைத்து வீடுபோய்ச் சேர்வதான கதை. புத்துயிர்ப்பு - மழ...
தீம்புனல் - ஜி. கார்ல் மார்க்ஸ். வாழ்வாங்கு வாழவைத்த வயலும் தோப்பும் குடியிருப்பு நகரான எதார்த்தச் சித்திரம். அதில் இயற்கையின் மீதான நேசமும் சக மனித அன்பும் சரிந்த கதை. வானுக்குக் கீழுள்ள அனைத்து உயிர்களுக்கும் அமிர்தமான மழை பொய்த்து விவசாயம் அழிந்து போகிறபோது சமூகம் அடையும் அகபுற மாற்றங்கள் , நிலம் மற்றும் சூழல் அடையும் உருமாற்றங்கள், நீராதாரப் பாழ்படல்கள், தொழில் நெருக்கடிகள் - போட்டிகள், பொ ருளாதாரப் பின்னடைவுகள், அதனுள் முளைக்கும் ஏற்றத்தாழ்வுகள், இடப்பெயர்வுகள், அதில் சோமு என்ற மூத்த குடியானவரின் குடும்பம் பாதிக்கப்பட்டு அவர்கள் பண்ணையம் பார்த்து வந்த நிலம் கைவிட்டுப்போவது சார்ந்த பிரச்சினைகள், அவரின் தம்பி குடும்பத்தின் கணவன் - மனைவி அதிகாரக் கூச்சல்களில் சிக்கி அழியும் வாழ்வு, பறிபோகிற உயிர்கள், சோமு குடும்ப உறவுகளுக்குள் நேர்கிற சொத்துப் பகிர்வுகள் தொடங்கிய மனஸ்தாபங்கள், அடுத்து என்னவென்று அறியாத அலைக்கழிப்புகள்,வாழ்வியல் தேவைகளுக்காக விவசாயத்தை விட்டு வெளியேறிப்போய்த் தேடிக் கொண்ட தேற்றுதல்கள், அடுத்தடுத்த தலைமுறைகளின் கேள்விக்குள்ளாகும் எதிர்காலங்கள், பிழைப்புக்கான அல்லல்...


Comments
Post a Comment