Posts

நூறு ரூபிள்கள் - மயிலன் சின்னப்பன்.

Image
  ஒரு பெருந்தொற்று பாவம் பார்த்து விட்டுப் போனதின் எச்ச மிச்சமாய்க் கிடக்கும் எனக்கு இதற்கு முன் எத்தனையோ முறை எதேதெற்கோ வீழ்ந்து துவண்ட போதெல்லாம் தன் " பக்கக்கரங்கள் " நீட்டி சுவீகரித்துக்காத்துக் கொண்டதைப் போல இனியும் வழக்கம் போல் புத்தகங்கள் தான் மறு உயிரளிக்கப் போகிறதென்ற முடிவிற்கு வந்த பின் கையிலெடுத்த முதல் புத்தகமே விதவிதமான கதைக்களங்களின் தேர்விலும் தேர்ந்த கதைகளுக்குத் தகுந்த மொழியும் எழுத்துமாகச் சேர்ந்து புத்துயிர்ப்பிலும் தெளியாத புதிர்ப்பாதையும் புராதன ரகசியங்களுக்குள் திறக்கும் புதியதொரு கதவையும் இன்னதென்றறியாத இளம்பிராயத்தின் இனியொருபோதும் திரும்பாத இனிமைகளையும் தோல்விகளுக்கு இடையில் பெறும் இடைவெளிகளையே ஆசுவாசமாய் எண்ணி வாழும் இன்னல்கள் நிறைந்த நடுத்தரக் கிராம மனங்கள் எதிர்கொள்ளும் குழப்பங்களையும் இழப்பையும் குடும்ப உறவுகளின் அன்பில் விளையும் நெருக்கத்தையும் அவர்கள் துயருறுகையில் அதைத்தடுக்கக் கைநீளாத இயலாமையில் துவளும் மனதையும் மதுமயக்கத்தில் சரிக்கும் தவறுக்குமான தராச

ஜார் ஒழிக - சாம்ராஜ்

Image
  சாம்ராஜ் அவர்களின் முந்தைய தொகுப்பாப " பட்டாளத்து வீடு " கொடுத்த நிறைவில் அடுத்த தொகுப்பு மிக ஆர்வமாக வாங்கி வாசித்தேன் . வேகமான நடையில் எழுதப்பட்டதும் முன்பே சொல்லப்பட்டதுமான கதைகள் தான் . மிகச் சிறிய சொற்றொடர்களில் எழுதி எழுதிச் சேர்த்த கதைகள் நம்மகிட்ட ஒரு ஆள் தலைப்புச் செய்தி வாசிக்கிற டோன்ல விவரிக்கிற மாதிரியே இருக்கிறது . அதனால் வாசிக்கும் போது நமக்கும் களம் விரைவாக உள்ளுணரப்பட்டு யதார்த்தமான காட்சியா விரிய ஆரம்பிச்சிடுது . கதைகளில் குறையாகவும் அதுவே தெரிகிறது . நிதானமில்லாமல் வேகவேகமாகக் கதை சொல்லிவிட்டு ஓடுகிறாப்போல் இருப்பதால் நாம் கதையை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை . அப்புறம் ஜார் ஒழிக கதைய சம்பந்தப்பட்டவங்க இன்னும் பரவலா வாசிக்கல போல ... சாம்ராஜ் இன்னும் தடையவோ நாடுகடத்தலையோ சந்திக்காம இருக்காரே ... இந்த வார்த்தையைச் சொல்வதற்கு நீங்கள் என்னை மன்னிக்கத்தான் வேண்டும் தோழர் கணேசன் அவர்களே ... " ஓம்லக்க " வாழ்க

ஒளி - சுசித்ரா

Image
  ஒளி கதையப் படித்து விட்டு ஊர்முழுக்க நீயும் படி , நீயும் படியென்று சொல்லி அந்த ஒரு கதைக்காகவே இந்தத் தொகுப்பை வாங்கி வாசிக்கையில் தொகுப்பில் இருக்கிற எல்லாக் கதையுமே நன்றாகவே இருக்கிறது . பெண்களின் எழுத்தென்றாலே ஒரு வகைமாதிரிக்குள் அடைபட்டிருக்குமென்ற நினைப்பிலிருந்த எனக்கு இந்த தொகுப்பு மாறுபட்ட எண்ணங்களைக் கொடுத்திருக்கிறது . பால்யம் முதல் முதுமை வரையிலான மனிதர்களைக் கொண்டியங்கும் கதைகளில் ஒரு மழை நாள் போன்ற எதார்த்தம் , தேள் , நட்சத்திரங்கள் பொழிந்து கொண்டிருக்கின்றன போன்ற பேண்டசி , யாமத்தும் யாமே உளேன் போன்ற அறிவியல் கதைகள் , ஊஞ்சல் போன்ற நினைவோடையுத்தி என்று மாறுபட்ட கதைக்களங்களும் தேர்ந்த எழுத்தும் மிகவும் புதுமையான அனுபவங்களைக் கொடுத்தது . சிறகதிர்வு கதை மரணம் சார்ந்த புதிர்களையும் அறிவியல் வெற்றிகளை ஏற்காத இயற்கையின் மறுதலிப்புகளையும் ஹைட்ரா கதை தோழிமார் அன்பையும் மாணவர் நலனில் பள்ளிகளின் பல்லிளிக்கும் பாதுகாப்பையும் லீலாவதியின் தத்துவங்கள் இயல்பான குடும்ப நிகழ்வுகளின் கொண்டாட்டங்களுக்